Wednesday 11 July 2007

இடுகை - 4

தோழனே! நான் உனக்கு செய்தது போல
காறி உமிழ்ந்து விடு என் முகத்தில்
நம் எதிரி பார்ப்பதற்கு முன்.
**********************************************
கண்ணை மூடினால்
என் கனவு தேவதை என் முன்னால்
கைகளை அலைத்து, கண் சிமிட்டி புன்னைகைக்கிறாள்.
கண் திறந்தால் தெருவெங்கும் தேவதைகள்.
எங்கே இருக்கிறாள் என் தேவதை.
**********************************************
யாரும் எடுக்க வேண்டாம்
இது நான் கசக்கிப் போட்ட காகிதம்
**********************************************
ஈயடிப்பானில் குவிந்திருந்த ஈக்களை அள்ளி
குப்பையில் போடப்போகும் வழியில்
எதிர்ப்படும் கசாப்புக் கடையைப் பார்த்தால்
குமட்டிக்கொண்டு வருகிறது
காபிக்கடை ஐயருக்கு.