Wednesday 13 May 2009

மகாத்மாக்கள் ஒழிக

கற்பழித்தவனை
கத்தி கொண்டெதிர்த்தவள்
கொல்லப்பட்டாள்
 
உறவுகள் கதறின
சிலர் கலகக்காரி என்றார்கள்
சிலர் வன்முறைக்காரி என்றார்கள்
 
இன்னும் சிலர்
எதிர்ப்பதில் பழுதில்லை
கத்தியெடுத்ததே குற்றம் என்கிறார்கள்
இன்னும்
 
கற்பழித்தவன்
கவனிக்கப்படாமல்
புனிதனாகிக்கொண்டிருக்கிறான்
கத்தியின் பொருட்டு