Monday 29 October 2007

மீண்டும் ஷகீரா

மீண்டும் ஷகீரா.

இந்த முறை இலண்டனிலிருந்து இந்த இடுகையை எழுதுகிறேன். இப்போது இலண்டனில் புது வேலை கிடைத்து வந்திருக்கிறேன். இதைச்சொல்ல தனி இடுகை தேவையா என்றுதான் தோன்றுகிறது. வேறென்ன செய்ய? இரண்டரை நாள் வார இறுதி. பொழுதே போக மாட்டேனென்கிறது. வெளியில் போகலாமென்றால் மழை பெய்கிறது.

பொழுதுபோகாமல் பெயரிலியின் பரந்த அபத்தியல்வாதமெல்லாம் படித்தேனென்றால் பாருங்கள். அப்படியும் முழுதாக படிக்க முடியவில்லையென்பது வேறு விசயம்.