Sunday 30 December 2007

சைவம் மட்டும் சாப்பிடுவதின் பெருமை

அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ளத்தான் நினைக்கிறேன். முடியவில்லை. இந்தியா என்றால் வாய்ப்பிருக்கிறது. இங்கு கல்யாணம் ஆகி தனி வீடு போனால்தான் அசைவம் சாப்பிடுவதை குறைக்க முடியும் போலிருக்கிறது. இப்படி சிந்தனை ஓடிக்கொண்டிருந்தபோது சைவம் மட்டும் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கும் நண்பன் ஒருவனுடன் செய்திருந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது. அதை இப்போது பொதுப்பார்வைக்கு வைக்கிறேன்.

முதல்முறை இலண்டன் வந்தபோது நாங்கள் ஐந்துபேர் தனியாக ஒரு வீடு எடுத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்। அதில் இரண்டுபேர் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள். மற்ற மூன்று பேரும் அசைவம் சாப்பிடக்கூடியவர்கள். அப்போது ஒன்றாக சாப்பாட்டு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த சைவம் சாப்பிடும் நண்பன் அவனருகிலிருந்த அசைவ பாத்திரத்தை என்னை நகர்த்தி வைக்க சொன்னான். அதன் பொருள் புரியக்கூடியதே. நான் கையை நீட்டி நகர்த்தி வைத்துக்கொண்டே மெதுவாகக்கேட்டேன்.

நீ ஏன் அசைவம் சாப்பிடுவதில்லை?

நாங்களெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமில்லை?

அதான் ஏன்னு கேட்கிறேன். ஏன் உயிரைக் கொல்ல விருப்பம் இல்லையா?

ஆம். அதுவும் ஒரு காரணம்.

ஒரு மாட்டை அடித்து குறைந்தது நான்கு பேர் சாப்பிடலாம். அதாவது ஒரு உயிரைக்கொன்று நான்குபேர் சாப்பிடலாம். ஆனால் நீ சாப்பிடும் சோற்றைப் பார். ஒவ்வொரு பருக்கையும் ஓர் உயிர். பல ஆயிரம் உயிர்களின் உயிரைக்கொன்று உன் ஒரு வேளை சாப்பாட்டை உட்கொள்கிறாய்.

நெல் பயிராய் வளர்ந்தால்தான் அது உயிர். வெறும் நெல் உயிரல்ல.

உயிரில்லாத பொருளிலிருந்து உயிர் தோன்றுவதில்லை. ஒவ்வோர் உயிரின் உணவும் ஓர் உயிர்தான். உயிரில்லாத பொருட்களை உணவாக உட்கொள்ளும் உயிர்கள் உலகில் இல்லை.

எனக்கு அதன் சுவை பிடிப்பதில்லை.

சுவைத்துப் பார்த்திருக்கிறாயா?

இல்லை. எனக்கு அதன் மணம் பிடிப்பதில்லை. அதனால் அது சுவையாக இருக்குமென்று தோன்றவில்லை.

நல்ல மணமாக சமைத்துக் கொடுத்தால் சாப்பிடுவாயா?

இந்த பேச்சை விடு. எனக்கு அசைவம் சாப்பிடுவதை நினைத்தாலே அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருகிறது.

எங்கள் சாப்பாடு உனக்கு வாந்தி வருமளவுக்கு அருவருப்பாக இருப்பதாக நினைப்பதும் அதை வெளிப்படையாக சொல்வதும் எங்கள் மனத்தை புண்படுத்தும் என்று உனக்குத்தோன்றவில்லையா? அது அருவருப்பானது என்று உனக்கு யாரும் சொல்லவில்லையா?

Tuesday 11 December 2007

ஏனெனக்கு மயக்கம். ஏனெனக்கு நடுக்கம்.


இந்த பாடலை கேட்கும்போதும் பார்க்கும்போதும் என்னென்னவோ செய்கிறது கரீனா. பூவே எனக்கும் சக்டா காடி பயணமும், வடா பாவும் பிடித்துதான் இருக்கிறது. கங்காஜல் போலீஸ்கார திவாரியை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. குட்மார்னிங் மடல் மட்டும் போதுமென்று நினைக்கிறேன். காலம் கடந்துவிட்டது.