Saturday 20 December 2008
Friday 19 December 2008
என் மதர்டங் தமிழ்-1
அளித்தது Unknown at Friday, December 19, 2008 4 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: மதர்டங்
Tuesday 16 December 2008
எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள்
மின்னஞ்சலில் வந்த ஒரு கதை. நன்றாக இருந்ததால் இங்கு பதிகிறேன் எதிர்பாராத நேரத்தில் எதையாவது பேசி, நம்மைத் துக்கப்பட வைத்து விடுகிறார்கள். ஒரு சின்ன வார்த்தையில் நம்மைச் சோர்வடைய வைத்துவிடுகிறார்கள். இதிலிருந்து வெளிவர வழி இருக்கிறதா?'' என்ற தேடுதலுடைய ஒவ்வொருவருக்குமான கட்டுரை இது? ஒரு சின்ன கதை :
சந்தைக்குச் சென்று, நல்ல வலுவான கழுதை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த வழியாகச் சென்ற இருவர், ``என்ன மனிதர்கள் இவர்கள்? இவ்வளவு வலுவான கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறார்களே'' என்று பேசிக் கொண்டு சென்றார்கள்.
``ஆமாம்பா. ஏன் இப்படி நடந்து செல்ல வேண்டும்?'' என அவர்களுக்குள் பேசிக் கொண்டு, இருவரும் கழுதையின் மேல் அமர்ந்து கொண்டார்கள்.
கொஞ்ச தூரம் சென்றதும், எதிரில் வந்த மூன்று பேர், இருவரையும் வினோதமாகப் பார்த்தார்கள். ``என்னதான் கழுதையாக இருந்தாலும் , அதன் மீது இரண்டு பேரா ஏறிக்கொள்வது? என்ன மனிதர்கள் இவர்கள்?'' என்று சலித்துக் கொண்டார்கள்.
``ஒரு கழுதையின் மேல் இரண்டு பேர் ஏறிக் கொள்வது தவறுதான்'' என்று சொல்லி, தன்னுடைய மகனை மட்டும் கழுதையில் அமரவிட்டு இறங்கிவிட்டார்.
அடுத்து வந்த பெண்மணி, ``என்ன அநியாயம் இது? முதியவரை நடக்க வைத்து விட்டு, இளைஞன் இப்படி ஒய்யாரமாய் வருகிறானே! கலிகாலம்'' என்று திட்டிவிட்டுச் சென்றார்.
``ஆமாம்பா நான் நடந்துவருகிறேன். நீங்க நல்லா உட்கார்ந்து கொண்டு வாங்க'' என்று சொல்லி, தன் தந்தையை அமரவிட்டு இறங்கிக் கொண்டார்.
அடுத்து வந்த குடும்பஸ்தர் ஒருவர், ``சின்னப் பையனை நடக்கவிட்டு, இவ்வளவு பெரிய மனுஷன் உட்கார்ந்து கொண்டு வருவது என்ன நியாயம்?'' என்று சொல்லிக்கொண்டே சென்றார்.
இதைக் கேட்ட இருவரும், ``அப்பா, கழுதையை சும்மாவிட்டு நடப்பதும் தவறு. இரண்டு பேரும் கழுதை மேல் அமர்வதும் தவறு. இரண்டு பேரில், ஒருவர் ஏறிக்கொள்வதும் தவறு. அப்படியென்றால் என்னதான் செய்வது? சரி இப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று சொல்லி, இருவரும் கழுதையை, தங்களின் தோள்மீது தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்!
எதிரில் வந்தவர்களெல்லாம், ``நடத்தி கூட்டி வரப்பட வேண்டிய கழுதையைத் தூக்கிக்கொண்டு செல்கின்றார்களே. என்ன மடத்தனமான மனிதர்கள் இவர்கள்?'' என்று வினோதமாய் பார்த்தனர்.
மற்றவர்களின் விமர்சனத்திற்கு முக்கியத்துவமளித்தால் இப்படித்தான்... வாழ்க்கையே ஆட்டமாடிவிடும். அப்படி ஆட வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு உண்மையை ஆழமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள்...
யாருக்கும் யாரையும் குறை சொல்வதற்குத் தகுதியில்லை. முழு மனிதராக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ அப்படித்தான் அவர்களும்.
இதிலிருந்து விடுபட ஒரேயொருவழி....
எது தர்மம்? எது நியாயம்? என்ற ஆராய்ச்சியோடு மட்டும் மற்றவர்களின் விமர்சனத்தை அணுகுங்கள். நியாயமற்ற விமர்சனங்களை முழுமையாக கண்டுகொள்ளாமல் விடுவதும் தவிர்ப்பதும்தான் தர்மம்... புத்திசாலித்தனம்...
அளித்தது Unknown at Tuesday, December 16, 2008 4 பின்னூட்டங்கள்
Monday 8 December 2008
பொன்சேகா பேட்டி- சில பத்திரிக்கை செய்திகள்
தினமலர் -
கொழும்பு : "விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சிக்கு இந்தியா உதவ வேண்டும். தற்போது நடந்து வரும் சண்டையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ...
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்: பொன்சேகா திமிர் பேட்டி
கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் நிலை மீது விமானப்படை ...
அளித்தது Unknown at Monday, December 08, 2008 1 பின்னூட்டங்கள்
Monday 1 December 2008
ஜெயமோகனின் எனது இந்தியாவும் பாவமௌனமும்
இடுகையே தலைப்பு. தலைப்பே இடுகை.
அளித்தது Unknown at Monday, December 01, 2008 0 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: தலைப்பிடுகை
Thursday 20 November 2008
ஜெயம் ஃபிராடும் பெருமாளும்
ஜெயமோகன் தற்கொலையைப் பற்றி நினைத்துக்கொண்டே ஏடிஎம் பொறியின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். சாரு நிவேதிதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.
அளித்தது Unknown at Thursday, November 20, 2008 0 பின்னூட்டங்கள்
Wednesday 19 November 2008
ஒபாமாவின் குடும்பம் வாஷிங்டனுக்கு குடியேறுகிறது
|
அளித்தது Unknown at Wednesday, November 19, 2008 2 பின்னூட்டங்கள்
Friday 14 November 2008
தூயாவின் அழைப்பை ஏற்று
அனுபங்கள்? பெரிதாக எதுவுமில்லை. கதிர்காமன், ரீட் குலாஸ் என்ற இரண்டு இலங்கைத்தமிழர்கள் என்னுடன் பள்ளியில் படித்தார்கள். அதில் கதிர்காமன் சிறுவயதிலேயே இங்கு வந்து விட்டானாம். இன்னும் இராமநாதபுரத்தில்தான் இருக்கிறான். கொத்தனார் வேலை செய்கிறான். அநேகமாக மலையகத்தமிழனாக இருக்கலாம். ரீட் மன்னாரை சேர்ந்தவன். தந்தை ஒரு வணிகராம். இராஜீவ் கொலை நடந்ததற்கு முந்தைய ஒரு வருடம்தான் என்னுடன் படித்தான். இவர்களிடமிருந்து ஒரு அனுபவமும் இல்லை.
இங்கே இலண்டன் வந்த பிறகு சில இலங்கைத் தமிழ் நண்பர்கள் கிடைத்தார்கள். மேலும் திருமணம் ஆகும் வரை அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நான் தங்கியிருந்தது இலங்கைத்தமிழ்க் குடும்பங்களுடன் தான். உள்வாடகைக்கு அதாவது பேயிங் கெஸ்ட். அவர்கள் மூலமாக கொஞ்சம் இலங்கையைப் பற்றித் தெரியும்.
2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?
5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?
தலைப்பை தூயாவின் இட்டிலியைப் பார்த்தவுடனே எழுதிவிட்டேன். ஆனால் இந்த இட்டிலியை இப்போதுதான் சுட்டேன்
அளித்தது Unknown at Friday, November 14, 2008 3 பின்னூட்டங்கள்
Thursday 13 November 2008
நஞ்செனப்படுவது யாதெனில்
அளித்தது Unknown at Thursday, November 13, 2008 0 பின்னூட்டங்கள்
Tuesday 11 November 2008
உடனடி பொன்மொழிகள் - 1
அளித்தது Unknown at Tuesday, November 11, 2008 0 பின்னூட்டங்கள்
Tuesday 4 November 2008
32ம் பின்னூட்டம்
அளித்தது Unknown at Tuesday, November 04, 2008 2 பின்னூட்டங்கள்
Monday 3 November 2008
குட்டிகள் கதை
அளித்தது Unknown at Monday, November 03, 2008 0 பின்னூட்டங்கள்
Friday 31 October 2008
நேரமில்லை நேரமில்லை.
அளித்தது Unknown at Friday, October 31, 2008 0 பின்னூட்டங்கள்
Thursday 30 October 2008
இராகவனுக்கும் பெருமாளுக்கும் போரடிக்கிறது
அளித்தது Unknown at Thursday, October 30, 2008 2 பின்னூட்டங்கள்
Tuesday 22 July 2008
கழுதைகள் ஆண்கள் பெண்கள்
சமன்பாடு 1
மனிதன் = சாப்பாடு+தூக்கம்+வேலை+கொண்டாட்டம்
கழுதை = சாப்பாடு+தூக்கம்
ஆகவே,
மனிதன் = கழுதை+வேலை+கொண்டாட்டம்
மற்றொரு வகையில்,
மனிதன்-கொண்டாட்டம்=கழுதை+வேலை
==============================================
சமன்பாடு 2
ஆண்கள் = சாப்பாடு+தூக்கம்+சம்பளம்
கழுதைகள் = சாப்பாடு+தூக்கம்
ஆகவே,
ஆண்கள் = கழுதைகள்+சம்பளம்
ஆகவே,
ஆண்கள்-சம்பளம் = கழுதைகள்
மற்றொரு வகையில்,
சம்பாதிக்காத ஆண்கள் = கழுதைகள்
==============================================
சமன்பாடு 3
பெண்கள் = சாப்பாடு+தூக்கம்+செலவு
கழுதைகள் = சாப்பாடு+தூக்கம்
ஆகவே,
பெண்கள் = கழுதைகள்+செலவு
மற்றொரு வகையில்,
செலவழிக்காத பெண்கள் கழுதைகள்
==============================================
தீர்வு:
சமன்பாடு 1 & 2 -களிலிருந்து
சம்பாதிக்காத ஆண்கள்=செலவழிக்காத பெண்கள்
தேற்றம் 1
ஆண்கள் பெண்கள் கழுதைகளாவதிலிருந்து காப்பதற்காக சம்பாதிக்கிறார்கள்
தேற்றம் 2
பெண்கள் ஆண்கள் கழுதைகளாவதிலிருந்து காப்பதற்காக செலவழிக்கிறார்கள்.
அதனால்
ஆண்கள்+பெண்கள் = கழுதைகள்+சம்பளம்+கழுதைகள்+செலவு
ஆகையால் தேற்றம் 1 & 2 களிலிருந்து நாம் அறிவது,
ஆண்கள்+பெண்கள்= 2 கழுதைகள் ஒற்றுமையாக வாழ்கின்றன.
பி.கு.
மின்னஞ்சலில் வந்தது மொக்கையாக மொழிபெயர்த்திருக்கிறேன்.
அளித்தது Unknown at Tuesday, July 22, 2008 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: மொக்கை
Thursday 3 July 2008
எனது கிறுக்கல்கள்-3
காலியாகவே இருக்கின்றன
எனது நாட்குறிப்பின் பெரும்பாலான பக்கங்கள்
நேரமின்மையோ
சொற்கள் குறைவாக இருப்பதோ
அல்லது ஒரே மாதிரியான வாக்கியங்களோ
காரணமாக இருக்கலாம்
அளித்தது Unknown at Thursday, July 03, 2008 0 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: கிறுக்கல்கள்
Sunday 22 June 2008
நான் பயங்கரன்
அது அப்படித்தான். அவர்கள் அப்படித்தான்.
இது இப்படித்தான். இவர்கள் இப்படித்தான்.
நாம் அவர்களை எதிர்ப்பதனால் இவர்களை எதிர்க்கவில்லை என்றில்லை. நாம் அவர்களை எதிர்க்கும் அதே வேளையில் இவர்களையும் எதிர்க்கிறோம்.
நாம் அவர்கள் அப்படித்தான் என்கையில் இவர்கள் இப்படித்தான் என்பதையும் இந்த அடிப்படையிலேதான் சொல்கிறோம்.
அவர்களும் இவர்களும் அதேதான்.
கட்டுரையை முழுவதுமாக வாசித்து எதிரே இருக்கும் சுவற்றில் போய் முட்டிக்கொள்ளவும்.
அளித்தது Unknown at Sunday, June 22, 2008 0 பின்னூட்டங்கள்
காமக்கதை-1
அவள் என்னருகில்தான் படுத்திருந்தாள். அவள் என்னருகில் படுத்திருந்தாள் என்பதைவிட நான் தான் அவள் என்னருகில் படுக்க வேண்டுமென்பதற்காக அரசியல் செய்திருந்தேன்.
ஆசையுடன் தான் பக்கத்தில் படுத்திருந்தேன். ஆனால் மனம் என்னவோ செய்தது. வயிற்றுக்கும் தொண்டைக்கும் இரண்டு உருண்டைகள் உருண்டன. திரும்பிப் படுத்துக்கொண்டேன்.
நள்ளிரவில் உடல் ஏனோ சூடாக ஆரம்பித்தது. திடீரென்று விழித்துக்கொண்டேன். என் கால் அவள் காலின் மீது இலேசாகப் பட்டுக்கொண்டிருந்தது. எப்போதும் அவ்வாறு நிகழ்கையில் விருட்டென்று காலை பின் வாங்கிக்கொள்வது என் வழக்கம். ஆனால் அந்த நள்ளிரவு சூடு என்னை அப்படி செய்யவிடவில்லை.
என் கால் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கிடையே அவள் கெண்டைக்காலைப் பிடித்து நசுக்கினேன். அவள் விழித்துத்தானிருந்திருப்பாள் போல. அவள் கைகளை என் மார்பின் குறுக்காகப்போட்டாள்.
எனக்கு சூடு இன்னும் ஏறியது. அவளை முழுவதுமாக அணைத்து ஆளுகைக்குட்படுத்தி இதழ்களைக் கவ்வினேன். அவள் பல்லிடுக்குகளின் மதுவை சுவைத்தேன். இதற்கு மேல் இதைப் பற்றி நான் விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. அன்றிரவு சற்று இனபமாகவே கழிந்தது. அடுத்த நாள் காலை ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டும் பார்க்க இயலவில்லை. சகஜமாக பேசவே பல நாட்கள் ஆயின.
பிறிதொரு நாள் நான் இதை எழுதி அவளிடம் காண்பித்தேன். ஆண்பாலுக்குப் பதிலாக பெண்பாலும் பெண்பாலுக்குப் பதிலாக ஆண்பாலும் இருந்தால் தனக்கு ஏற்ற மாதிரி இருந்திருக்கும் என்றாள்.
அளித்தது Unknown at Sunday, June 22, 2008 6 பின்னூட்டங்கள்
Tuesday 17 June 2008
நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்
நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்
பெரும் கூச்சல்
உலக நாயகன் என்கிறார்கள்
ஆஸ்கார் நிச்சயம் என்கிறார்கள்
அரங்கிற்கு வெளியே
யாரோ குருதி வடிகிறது என்று கத்தினார்கள்.
பகக்த்திலிருந்தவரைப்பார்த்தேன்
கிழக்கு விடிகிறது என்றார் சம்மந்தமில்லாமல்
புரியாமல் என்ன என்றேன்
பேசாமல் படத்தைப்பாருங்கள் என்றார்
திரும்பி கால்சட்டைப்பையிலிருந்த
கைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டேன்
படம் முடிந்ததும் காதலிக்குப் பேசவேண்டும்
அளித்தது Unknown at Tuesday, June 17, 2008 2 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: கிறுக்கல்கள்
Sunday 1 June 2008
எனது கிறுக்கல்கள்-1
பூங்காவில் குழந்தையுடன் நடை பயிலும் ஈழத்துப்பெண்
ஐபாடில் பாட்டுக் கேட்கும் பஞ்சாபி இளைஞன்
சைக்கிளில் செல்லும் கறுப்பு முதியவர்
புகைத்தபடி சாலையில் செல்லும் போலந்து பெண்
கைபேசியில் பேசியபடி செல்லும் எகிப்து இஸ்லாமியர்
அமைதியாகத்தான் இருக்கிறது உலகம்
##################################################
இன்று என்ன கிழமையென்று யாரோ கேட்டார்கள்
சட்டென்று சொல்லத்தெரியவில்லை
ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கின்றன
##################################################
நம்பியிருப்பேன்
என்னை பிடிக்கவில்லையென்று
நான் வரும்வரையில் உன் விழிகள் யாரையோ தேடிக்கொண்டிருந்ததை
நான் கண்டுகொள்ளும் முன்பு சொல்லியிருந்தாயானால்
##################################################
அடர் காபி பிடிக்கும்
முறுகலான தோசையும்
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பிடிக்கும்
என்றெல்லாம் உன்னிடம் சொல்ல ஆசைதான்
என் தோளில் சாய்ந்து
காதல் பெருக
கண்கள் செருக
எனக்கு என்னென்ன பிடிக்கும் என்று நீ கேட்க விரும்பினால்
##################################################
அளித்தது Unknown at Sunday, June 01, 2008 3 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: கிறுக்கல்கள்
Saturday 26 April 2008
டேக் மீ பேக் டு யூவர் ஹவுஸ்
அளித்தது Unknown at Saturday, April 26, 2008 0 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: basement-jaxx
Sunday 9 March 2008
வாருங்கள் வெயில் காலத்தை வரவேற்போம்
அளித்தது Unknown at Sunday, March 09, 2008 1 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: புகைப்படம்
Friday 7 March 2008
சிவராத்திரியன்று யோகியின் சிவ சிவ சொல்லிசையைக் கேட்டு மகிழுங்கள்
அளித்தது Unknown at Friday, March 07, 2008 0 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: சிவராத்திரி, சொல்லிசை, யோகி
Sunday 2 March 2008
Sunday 24 February 2008
யோகி.பி & நட்சத்திரா தமிழ் சொல்லிசைப்பாடகர்கள் நேர்காணல்-காணொளி
அளித்தது Unknown at Sunday, February 24, 2008 1 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: tamil hip hop, tamil rap, தமிழ் சொல்லிசை, யோகி
Sunday 27 January 2008
Thursday 24 January 2008
நான் ஒங்கட்ட வெளயாட்டா பேசுனத பூரா நம்பிட்டீங்க....ஐயோ! ஐயோ!
அளித்தது Unknown at Thursday, January 24, 2008 0 பின்னூட்டங்கள்
Saturday 19 January 2008
கடவுளின் நகரம் - 1
என்ன தம்பி எப்படியிருக்க? இலண்டன்லாம் எப்படி இருக்கு?
ரொம்ப குளிரா இருக்கு. சரி இன்னைக்கு ஆபீஸ் போகலயா?
இல்ல போகல. நீ வருவேன்னுதான் லீவு போட்டிருக்கேன்.
நண்பன்டா
சரி இப்ப என்ன ப்ளான்?
அண்ணா நகருக்கு விடு. ட்ரெஸ் எடுக்கனும்.
வாங்கிட்டு?
சொல்லு.
சொல்லு. ஈக்ள் போவோமா இல்ல இக்னைட்டுக்கு போவோமா?
ஈக்ளுக்கு போவோம்.
ஏன். யாரோ வருவாய்ங்கன்னு சொன்னியே அவய்ங்கள பாக்கணுமாக்கும்.
ம்
பாத்து?
சும்மாதான். வர்றாய்ங்களான்னு பாக்கதான்.
இதுக்கெதுக்கு அவ்வளவு தூரம். இக்னைடுக்கு போவோம். ஹெல்மெட் வேற இல்ல. புடிச்சாய்ங்கன்னா ட்ரங்கன் மங்கின்னு அதுக்கு வேற போட்டு தாளிச்சுருவாய்ங்க.
சரி விடு.
அடிச்சுட்டு படத்துக்கு போவோம்.
என்ன படத்துக்கு?
கற்றது தமிழ் போவோம்.
பாத்துட்டேன்னு சொன்ன.
பாத்தா என்ன இன்னொரு தடவ பாப்போம்.
படம் எப்படியிருக்கு?
பிரிட்டோவுக்கு புடிக்கல. எனக்கு புடிச்சிருக்கு. ஒனக்கும் புடிக்கும்னு நெனைக்கிறேன். சரி அப்புறம் என்ன. பொண்ணு பாக்குறது என்ன ஸ்டேஜுல இருக்கு.
பாத்துக்கிட்டே இருக்காய்ங்கடா. எவனும் ஒத்து வர மாட்டேங்குறாய்ங்க.
என்னடா இவ்வளவு சம்பளம் வாங்குற ஒனக்கே இப்பிடின்னா நாங்கள்லாம் என்ன சொல்றது.
சம்பளம் என்னடா சம்பளம். அவனவன் பி ஈ படிச்ச மாப்பிள்ளதான் வேணும்ன்றாய்ங்க. நம்ம சேரும்போது. பி ஈ-லாம் சேர்றது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு. இப்ப பாரு நண்டு நசுக்கெல்லாம் பி ஈ படிச்சிருதுங்க. நம்மலயும் படின்னா எங்க போறது. பத்திரிக்கைலதான போடணும் என்னத்தயாவது போட்டு மேல ஒரு கோட போட்டுக்கங்கடானு கேக்குறாய்ங்களா. ம் முட்டாள் மாப்பிள்ளைகளும் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கும் மணப்பெண்களும்.
இது நல்லாயிருக்கே. பேசாம இதயே தலைப்பா வச்சுருவேன்.
ங்கொய்யால. நான் நல்லா இருக்கிறது புடிக்கலயா? இப்படிலாம் தலைப்பு வச்சா சூடான இடுகைல வந்துரும். அப்புறம் நம்மள ரவுண்ட கட்டிருவாய்ங்க.
அப்பயே எப்படியாவது கஷ்டப்பட்டு பி ஈ சேந்திருக்கணும்டா.
நம்மளா வேணாம்னோம். அதெல்லாம் பார்ப்பன சதிடா.
பார்ப்பான்னா ஐயருதான? ஏன் அவிய்ங்க என்ன பண்ணாய்ங்க?
கே.பாலச்சந்தரும் மணிரத்னமும் சேந்துதான ஏ.ஆர். ரஹ்மான இண்ட்ரட்யூஸ் பண்ணாய்ங்க. அப்ப இருந்து நானும் பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கிறேன்னு ஒரு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணேன். இதையெல்லாம் "தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வித் ஸ்டடீஸ்"னு ஒரு புக்கு போட்டம்னா மூணு வால்யூம்ல முப்பது எடிசன் போகும்.
ஏன் அதோட விட்ட. மொட்ட மாடில புள்ளைக படிக்க வரும்போது "அப் அப் மை ஃபிரண்ட் அண்டு க்விட் யுவர் புக்ஸ்"-னு புக்க தூக்கி வீசுனமே அதயுஞ்சொல்லு.
அத மூணாவது வால்யூம்ல சேத்துருவோம்.
இப்பதான் இலண்டன் போயிட்டியே இப்ப தேடி வருவாய்ங்கள்ல
நல்லா வருவாய்ங்க. அம்புட்டு தூரத்துக்கு புள்ளய அனுப்பிட்டு நாங்க இங்க என்னன்னு இருக்குறதுன்றாய்ங்க.
நீங்க அப்பிடி ஆளுகளா பாக்குறீங்க.
ஆமா நாங்க என்ன ஒங்கள மாதிரியா. இருக்குறதே ஊருக்கு பத்து பேரு. இதுல எங்கிட்டிருந்து வளச்சு வளச்சு தேடுறது.
நாங்க மட்டும் என்ன. நீங்க ஊருக்கு பத்துன்னா நாங்க பதினஞ்சு அவ்வளவுதான். சரி இலண்டன்ல யாரையாவது கரெக்ட் பண்ண வேண்டியதுதான?
உள்ளூர்லேயே ஓணான் புடிக்க முடியலயாம். அதுக்கெல்லாம் தெறம வேணும்டா. அப்பிடியே கரெக்ட் பண்ணாலும் அவிய்ங்கள்லாம் பேப்பர்ல தொடைக்கிறவய்ங்க. நமக்கு ஒத்து வராது.
நான் ஒன்னய பொம்பளப்புள்ளயத்தான் கரெக்ட் பண்ண சொன்னேன்.
மூதேவி அவிய்ங்க கல்ச்சர் வேற நம்ம கல்ச்சர் வேறன்னு சொன்னேன். மண்டையப் பாரு.
ஓ நீ அப்பிடி வாறீயா. திருச்சியில எதோ ஒரு பொண்ணு இருக்குன்னியே அதென்ன ஆச்சு.
அதுக்கு கல்யாணம் ஆயிருச்சு.
என்னடா சொல்றா? சொன்னியா இல்லயா?
நானும் சொல்லல அதுவும் சொல்லல. ஒனக்குத்தான் தெரியுமே. எனக்கு பொம்பளப்புள்ளைகட்ட பேசுறதுனாலே கைகாலெல்லாம் ஒதறும். அப்புறம் என்னத்த சொல்றது.
என்னடா இராமநாதபுரத்துக்காரனாயிருந்துட்டு இப்பிடி பயப்புடுற.
ஆமா அதுவும் மூச்சுக்கு முன்னூறு தடவ எங்கண்ணன் மோசமானவன் எங்கப்பா கோவக்காரரு எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க ஆ ஊ-ங்குது. அவங்க அண்ணன் திருவெறும்பூர்ல பெரிய இரவுடியாம்.
திருவெறும்பூரா? அது எங்க இருக்கு?
திருச்சி பக்கத்துலதான்.
அவிய்ங்க அங்க பெரிய இரவுடின்னா நம்ம இராம்நாட்ல இரவுடி. இதுக்கெல்லாம் பயந்தா லவ் பண்ண முடியுமாடா?
ஆமா இதேதான் கார்த்திட்ட சொன்னேன். அவன் எடுத்தோன்ன என்ன ஆளுகடா-ன்னான். உங்க ஆளுகதாண்டான்னேன். லவ் பண்ணேன்னா மொத நாந்தான் வெட்டுவேங்கிறான்.
அவரு வெட்டுவாராமா? அவன் ஒரு ஆளுன்னு சொல்றியேடா.
அதில்ல. அவன் சும்மா வெளயாட்டுக்குத்தான் சொன்னான். இருந்தாலும் இந்த விசயத்துல இவிய்ங்கள நம்ப முடியாது. மாப்ள மச்சாம்பாய்ங்க. ஜாதின்னு வந்துட்டா அதெல்லாம் பாக்க மாட்டாய்ங்க. இந்த சதீஸ் தங்கச்சி மேட்டர் என்னாச்சு. அரமனயோடல்ல தொரத்துனாய்ங்க. நீங்க தானடா ஒளிச்சுக்கிட்டு திரிஞ்சைங்க.
அத ஏண்டா இப்ப பேசுற. அவய்ங்க வெளயாட்டுக்கு நம்மள ஊருகாயாக்கிட்டு போய்ட்டாய்ங்க.
ஏண்டா.
ஆமா. அவ்வளவு நொம்பலத்த கூட்டுனாய்ங்க. கூப்ட்டு பேசுனோன்ன ஆளுக்கு ஒரு பக்கமா போயிட்டாய்ங்க. எடயில நம்ம பேருதான ரிப்பேராய் போயிருச்சு. சரி ஒனக்கு என்ன எடுக்கனும்.
சட்டை பேண்டு டை அப்புறம் ஆபீஸ் போட்டு போறமாதிரி ஒரு ஷூ.
ஆபீஸுக்கு டையெல்லாம் கட்டிட்டு போவியாடா?
கோட் ஆஃப் கண்டக்ட்ல கட்டச்சொல்லி சொல்லியிருக்கு. நெறய பேரு கட்டுறதில்ல.
சரி அப்பிடியே யூ டெர்ன் அடிச்சு வுட் லேண்ட்லயும் பேசிக்ஸ்லயும் ஒரு பார்வ பாத்துட்டு நேரா இக்னைட்டுக்கு விட்டுறலாம்.
அளித்தது Unknown at Saturday, January 19, 2008 5 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: கடவுளின் நகரம்
Tuesday 15 January 2008
சுல்தான் தி வேரியர்-2
சுல்தான் தி வேரியர்। ரஜினியின் மகள் சௌந்தர்யா, ரஜினியை மையமாக வைத்து எடுத்திருக்கும் அனிமேஷன் படத்தின் ட்ரைய்லர்.
அளித்தது Unknown at Tuesday, January 15, 2008 1 பின்னூட்டங்கள்
Saturday 12 January 2008
ஆகா.........பிரமாதம்........பிரமாதம்.........கூக்ள் ரீடரில் தமிழ்மணம்
கூக்ள் ரீடரில் தமிழ்மணத்தை இணைக்க முடிகிறது। "கண்டேன் சீதை" மாதிரி முதலில் சொல்ல வந்த விசயத்தை சொல்லி விடுகிறேன். வேறு யாரும் சொல்லிவிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை சொல்கிறேன்
அலுவலகத்தில் ப்லொக்கர் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே நான் அதிகம் வாசிக்கும் தமிழ் வலைப்பதிவுகளை கூக்ள் ரீடரில் இணைத்து படித்து வருகிறேன். ஒவ்வொரு நாள் மாலையும் பதிவுகளை தேடித்தேடி ரீடரில் இணைத்து வருகிறேன். அது பெரிய நசல் பிடித்த வேலையாக இருக்கிறது.
தற்போது புதிதாக (ஏற்கெனவே இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. நான் இப்போதுதான் பார்க்கிறேன்) கூக்ள் ரீடர் தன்னில் அதிகம் இணைக்கப்படும் செய்தியோடைகளை பரிந்துரை செய்கிறது. அதன் மூலம் அதிகம் பேர் வாசிக்கும் பதிவுகள் நம் வாசலுக்கே வந்து இணைக்க சொல்லிக் கேட்கின்றன. அந்தவகையில் நான் இன்று பார்த்த போது கூக்ள் ரீடர் தமிழ்மணம் என்று ஒரு செய்தியோடையை பரிந்துரையில் காட்டியது. திறந்து பார்த்தால் தமிழ்மணமேதான். தினமும் திரட்டப்படும் இடுகைகளுக்கான செய்தியோடை அது.
இனி தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பதிவுகளின் செய்தியோடைகளை கூக்ள் ரீடரில் இணைக்கத்தேவையில்லை। அதற்கு பதிலாக தமிழ்மணத்தையே இணைக்கலாம். இனி தமிழ்மணத்தில் தினமும் வெளியிடப்படும் எல்லா இடுகைகளையும் கூக்ள் ரீடரில் பார்க்கலாம்.
தமிழ்மணத்தின் செய்தியோடை
http://www.thamizmanam.com/xml-rss2.php
என்ன ஒரு குறை மற்ற செய்தியோடைகளை இணைத்தால் கூக்ள் ரீடரிலிருந்தே சம்மந்தப்பட்ட பதிவைப் படிக்கலாம்। தமிழ்மணத்தை இணைத்தால் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பைக் கொண்டு ஒவ்வொரு பதிவையும் திறந்துதான் படிக்க வேண்டும்.
அப்படியே 'ம' திரட்டிக்கும் ஒரு செய்தியோடை கொடுத்தால் தேவலை।
அளித்தது Unknown at Saturday, January 12, 2008 8 பின்னூட்டங்கள்
குறிச்சொற்கள்: googlereader, tamilblogs, கூகுள் ரீடர், தமிழ்மணம், தமிழ்வலைப்பதிவுகள்