Monday 27 July 2009

fring இது VOIP தந்திரம் என்ற தயாளன் பாலாவின் இடுகைக்கு ஒரு பின்னூட்டம்.

fring இது VOIP தந்திரம் என்றொரு இடுகை இட்டிருக்கிறார். அதற்கு நான் பின்னூட்டமாக போட நினைத்ததை ஒரு இடுகையாக இடுகிறேன்.

ஃப்ரிங் மூலமாக கை மற்றும் தொலைபேசி அழைப்புகளையும் செய்யலாம். அதற்கும் SIP நுட்பம் பயன்படுகிறது. ஃபிரிங்-கில் SIP enable செய்து உங்கள் SIP நிரலையிட்டால் SIP கணக்கைப் பயன்படுத்தி கை மற்றும் தொலைபேசி அழைப்புகளையும் செய்யலாம். SIP கணக்கு தொடங்குவதற்கு smartvoip.com என்ற தளத்துக்கு செல்லவும். அங்கு ஒரு கணக்கு திறந்து கடனட்டை அல்லது பேபல்(paypal) மூலம் பணம் நிரப்பவும். அதில் SIP என்ற சுட்டியில் நுழைந்து வழிகாட்டல்களை பின்பற்றவும்.

இதில் ஒரு நிமிட இந்தியாவிற்கான அழைப்பு ஒரு யூரோ செண்ட் ஆகும். கிட்டத்தட்ட 65 பைசாக்கள். மேலும் பல நாடுகளுக்கு இலவச அழைப்புகளும் உண்டு.

Sunday 31 May 2009

பக்கத்து வீட்டில் படுகொலை

பக்கத்து வீட்டில்
படுகொலை
விவரமறிய
எண்டிடிவியின் உலக செய்திகளை
பார்க்க வேண்டும்
அல்லது
சன்னலை திறக்க வேண்டும்

ஸ்பார்டகசும் பிரபாகரனும்

சமீபத்தில் மூன்று வெவ்வெறு தொ.கா. அலைவரிசைகளில் மூன்று ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்தேன். பிரேவ் ஹார்ட், ஹோட்டல் ருவாண்டா மற்றும் ஸ்பார்டகஸ். இதில் பிரேவ் ஹார்ட்டும் ஹோட்டல் ருவாண்டாவும் முன்னரே பார்த்த வரலாற்றுத் திரைப்படங்கள். ஸ்பார்டகஸ் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாற்று நாயகன். இந்த மூன்று கதைகளிலும் ஈழ சோகத்தை ஒப்பிட முடிகிறது. ஸ்பார்டகஸை வென்ற ரோமானிய தளபதி சொல்கிறான், "ஸ்பார்டகஸை சிலுவையில் ஏற்றிய பிறகு அவனுக்கென்று சமாதியென்று ஒன்றும் இருக்கக்கூடாது. அவனது சாம்பல்கூட யாருக்கும் கிடைக்கக்கூடாது"

ஒவ்வொரு கதைக்கும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி இருக்கக்கூடும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் குரூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Tuesday 19 May 2009

ஓர் அடிமையின் பிரியாவிடை

 
இனி எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
ஈழம்
பயங்கரவாதி
தாயகக்கோட்பாடு
ஒப்பந்த மீறல்
இனப்படுகொலை
பேரினவாதம்
என்று எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை
தோல்வி முகத்தில் அறைந்த வலியுடன்
கூனிக்குறுகி திரும்பி நடந்து கொண்டிருக்கிறது
வெட்கங்கெட்ட வரலாறு
 
ஜெயமோகனின் இந்த கவிதையின் பாதிப்பு இது

Wednesday 13 May 2009

மகாத்மாக்கள் ஒழிக

கற்பழித்தவனை
கத்தி கொண்டெதிர்த்தவள்
கொல்லப்பட்டாள்
 
உறவுகள் கதறின
சிலர் கலகக்காரி என்றார்கள்
சிலர் வன்முறைக்காரி என்றார்கள்
 
இன்னும் சிலர்
எதிர்ப்பதில் பழுதில்லை
கத்தியெடுத்ததே குற்றம் என்கிறார்கள்
இன்னும்
 
கற்பழித்தவன்
கவனிக்கப்படாமல்
புனிதனாகிக்கொண்டிருக்கிறான்
கத்தியின் பொருட்டு

Tuesday 12 May 2009

NDTV talks about death toll

Death toll in swine flu reaches 61: WHOThe number of confirmed cases of swine flu or A(H1N1) virus has increased to 5,251, with 61 people dead from the disease around the world, the World Health Organisation (WHO) announced on Tuesday. 

Tuesday 28 April 2009

Sweden recalls Lanka envoy after minister barred-Courtesy Google news

Sweden recalls Lanka envoy after minister barred

Reuters India - ‎34 minutes ago‎
LUXEMBOURG, April 28 (Reuters) - Sweden has recalled its ambassador to Sri Lanka after Colombo barred Swedish Foreign Minister Carl Bildt from participating in a mission there with French and British colleagues this week, Bildt said on Tuesday.
Video: Swine Flu: Swedish Foreign Minister urges caution
EUX.TV

Monday 27 April 2009

சுண்ணாம்பு தடவப்பட்ட முதலாளி

தலைப்பே இடுகை. இடுகையே தலைப்பு.

Tuesday 7 April 2009

ஏம்பா இந்த "எதிர்வினை"ன்னா என்ன?

Saturday 4 April 2009

ச்லம்டாக் மில்லியனரைப் பற்றி கமல்

Friday 27 February 2009

உலகெங்கிலும் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், இந்துத்துவத் தமிழ்க் கும்பலில் ஒருவர்

Wednesday 25 February 2009

சிங்கள இராணுவத்தை விமர்சிக்கும் மாலன்

என்கிறார் மாலன்.
 
ஒருவேளை இதை மனதில் வைத்துதான் சொல்கிறாரோ?!

Friday 20 February 2009

ஒளவையே ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி சுவற்றில் முட்டு.

 
 
 
 
 
 

Wednesday 18 February 2009

தூசி படிந்த கண்ணாடி

சேரிகளை
வெள்ளைக்காரர்கள்
தேடிக்கொண்டிருப்பதில்லை
கண்டடைகிறார்கள்
நாம்
கண்டடைகிறோம்
தேடிக்கொண்டிருப்பதில்லை
 
###############################
 
இது
நம்முடையதைப் போல இல்லை
இங்கே
தாராவியுமில்லை
சந்த்ராயனுமில்லை

Sunday 15 February 2009

உறவுகளே.........

என் அக்காள் மகன் 

தலைசிதறி செத்துக்கொண்டிருந்தபோது
என் பெரியப்பா 
நிலவுக்கு வின்கலம் விட்டுக்கொண்டிருந்தார்
நான் 
ஸ்லம்டாக் மில்லியனர் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் தம்பி 
தீக்குளித்தான்.

Saturday 7 February 2009

கண்கள் பனித்தன. இதயம் இனித்தது

ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் இதே இலண்டனில்  நண்பர்களுடன் தங்கி இருந்தபோது  நண்பன் ஒருவன்  கைலியை மடித்துக்கொண்டே சற்று மெதுவான் குரலில் என்னிடம் சொன்னான் "இலங்கைத்தமிழர்களுக்கு நம்ம ஓரளவுதான் ஹெல்ப் பண்ண முடியும். தெரியுதா?"  இதன் பொருள் எளிதானது. நான் இலங்கை செய்திகளை அதிக அக்கறையுடன் படிப்பது தவறென்கிறான். எனக்கு அறிவுரை சொல்கிறான். நான் அப்போது பதில் எதுவும் சொல்லவில்லை.
 
இப்போது அவன் சென்னையில் இருக்கிறான்.
 
கொஞ்ச நாள் முன்பு அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.  ஈழம் வரலாறு என்று தலைப்பிட்டு ஈழ வரலாறு குறித்த பிடிஎஃப் கோப்பு ஒன்று.  அதை வரலாறு முக்கியம் அமைச்சரே என தலைப்பிட்டு நான் ஒரு சுற்று அனுப்பினேன்.
 
இன்று அவனிடமிருந்து ஒரு மின்னஞ்சல். இலங்கையின் இன்றைய போர் நிலவரம் என்ன. புலிகள் வெல்வார்களா என்று கேட்டு. நான் தமிழ் சசியின் "கிளிநொச்சி ஒரு போரியல் பார்வை"யை அனுப்பி வைத்தேன். அதை TIFF கோப்பாக மாற்றி நிறைய பேருக்கு அனுப்பியிருக்கிறான். எனக்கும் ஒரு நகல் வந்தது.
 
எப்படி வந்தது அவனில் இந்த மாற்றம்?
 
தமிழ் சசியின் இடுகை ஒன்றிற்கு  நான் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன். தமிழகத்தமிழர்களை அக்கறை கொள்ள வைக்க புலி ஆதரவெல்லாம் கோசமெல்லாம் தேவையில்லை. செய்திதான் இப்போதைய தேவை. அந்த மக்கள் படும் துன்பங்களைப் பற்றிய செய்தி மட்டுமே போதும்.  அதை சுவரொட்டிகள் மூலமோ அல்லது துண்டு பிரசுரங்கள் மூலமோ செய்ய்லாமென்று. அதையே சமீபத்தில் கதிர் சயந்தனும் சொல்லியிருந்தார்.   இப்போது அதுதான் நடந்திருக்கிறது. சற்று தாமதாகவென்றாலும்.
 
ஏனென்றால் ஒரு படுகொலை(வங்காலை) செய்தியை தற்செயலாக இணையத்தில் படிக்கப்போய்தான் நான் இலங்கை விவகாரங்களில் ஆர்வம் காட்டத்தொடங்கினேன். பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். முற்றிலும் தலைகீழான ஒரு கருத்துநிலைக்கு வந்தேன்.

Friday 6 February 2009

இந்தியில் மொழிமாற்றம் வேலைசெய்கிறது. தமிழுக்கு எப்போது?