Saturday 20 December 2008

என் மதர்டங் தமிழ்-2

முன்பு இலண்டனுக்கு வந்த புதிதில் நண்பர்கள் சேர்ந்து வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். நாங்களேதான் சமையல். ஒருநாள் நாங்கள் கடைத்தெருவில் காய்கறி வாங்கிக்கொண்டிருந்தோம். ஒரு காய்கறிக்கடை கல்லாவில் இருந்தவன் எங்களிடம் கேட்டான்.

"நீங்கள் தென்னிந்தியர்கள்தானே?"

"ஆம்"

"நீங்கள் தென்னிந்தியர்கள் என்று நான் சொன்னேன். இல்லை இலங்கைத்தமிழர்கள் என்று இவன் சொன்னான். கடைசியில் நான் சொன்னதுதான் சரியாக இருந்தது" என்றான் பக்கத்திலிந்தவனைக்காட்டி.

நண்பர்களில் ஒருவர் அவனிடம் கேட்டார் "நீங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்".

"இல்லை நாங்கள் இந்தியர்கள் இல்லை. பாகிஸ்தானியர்கள்"

3 பின்னூட்டங்கள்:

  1. said...

    நல்ல பின்னவீனத்துவ சம்பவம் !!!!

  2. said...

    :-0)

  3. said...

    தொடர்ந்து என் இடுகைகளுக்கு ஆதரவு
    தருகிறீர்கள். நன்றி செந்தழல் ரவி

    வருகைக்கு நன்றி உருப்படாதது அணிமா.