Tuesday 17 June 2008

நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்

நான் தசாவதாரம் பார்த்துக்கொண்டிருக்கையில்
பெரும் கூச்சல்
உலக நாயகன் என்கிறார்கள்
ஆஸ்கார் நிச்சயம் என்கிறார்கள்

அரங்கிற்கு வெளியே
யாரோ குருதி வடிகிறது என்று கத்தினார்கள்.
பகக்த்திலிருந்தவரைப்பார்த்தேன்
கிழக்கு விடிகிறது என்றார் சம்மந்தமில்லாமல்
புரியாமல் என்ன என்றேன்
பேசாமல் படத்தைப்பாருங்கள் என்றார்
திரும்பி கால்சட்டைப்பையிலிருந்த
கைபேசியை எடுத்துப் பார்த்துக்கொண்டேன்
படம் முடிந்ததும் காதலிக்குப் பேசவேண்டும்

2 பின்னூட்டங்கள்:

  1. said...

    எப்படிங்க.. நீங்க எது எழுதுனாலும் சூடான இடுகைல வந்துடுது.

    ஆமா, இது 'முடியலை'த்துவமா?

  2. said...

    வாங்க முகவை மைந்தன்.

    என்னது சூடான இடுகையா? அச்சச்சோ நான் கவனிக்கவே இல்லையே.

    //
    ஆமா, இது 'முடியலை'த்துவமா?//

    பரவாயில்ல. அப்படியே வச்சிக்கிருங்களேன். என்ன இருந்தாலும் வெண்பா வேந்தர் நீங்க. உங்க முன்னாடி நாங்கள்லாம் எம்மாத்திரம்